இதயத்தின் குரல்
ஒரு இதயத்தின் குமுறல்
Wednesday, December 19, 2012
நம்பாதே!!
பெண்ணை நம்பாதே...
விட்டு சென்றுவிடுவாள் என்றான்- மொழிகூட
தோன்றா காலம் முதல்
இருந்தும் என்ன பயன் !! இந்த மனம்
அவளையே சுத்தி செல்கிறது
பின்வரபோவதை அறிந்திருந்தும்
Tuesday, December 18, 2012
குழப்பம்
பெண்ணே !
என்னோடு பேசும்போது
பாதுகாப்பில்லாமல் உணர்கிறேன் என்றாய் !!
ஒரு நொடியில்
ஒரு சொல்லில்
என் மீது நீ கொண்ட காதலை அழகாக
இப்படி சொல்லிவிட்டு பிரிந்து சென்றுவிட்டாய் !!!
அதன் வலி என்னவென்று உணராமல்..........
Monday, December 17, 2012
முதல் முத்தம்
நீ தரும் ஒவ்வொரு முத்தமும்
ஏன் எனக்கு மட்டும்
உன்னிடம் நான்
முதல் முறை வாங்கும் முத்தமாகவே தோன்றுகிறது
இது தான் காதலுக்கு அடையாளமோ
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)