Friday, August 21, 2015

இதயம் இல்லை

நெஞ்சில் ஒரு பயம்..!
பிரிந்து சென்ற நீ
எங்கு
திரும்பி வந்துவிடுவாயோ என்று -காரணம்
உன்னை
வெறுப்பதால் அல்ல ..!!
மீண்டும் ஒரு தோல்வியை
ஏற்க என் இதயம்
இல்லை

நீயா

நீ செய்த காதலும்
என் மீது நீ கொண்ட அன்பும்
இன்று நான் பார்க்கும்
உன்னிடமா கண்டேன் அன்று -
எத்தனை குணாதிசயம்
இந்த பெண்ணின்
இதயத்தில..!!

பள்ளி பாடம்

கல்வியோடு
காதல் தோல்வியும்
சொல்லி கொடுக்கவேண்டும்
இப்பள்ளிகளில் -
அப்பொழுது மட்டும் தான்
காதல் தோல்விகள்
குறையும்

ஒரு ஆணும் புத்திசாலி ஆவான்

மீண்டும் காதல்

நம் சந்திப்பு
உன் நினைவில் இல்லை
பின் ஏன் பிரிந்தது மட்டும்
நினைவில் கொண்டிருக்கிறாய் பெண்ணே
உன்னை மீண்டும் காதல் செய்ய 

ஒரு வழியையும் நீயே சொல்லிவிடு -
இம்முறை உன் நினைவில் நான்
வாழ்வேன் எப்பொழுதும்

சூசகம்

கண்ணாம்பூச்சி விளையாட பிடிக்கும் என்றாய் !
அது
என் கனவிலும்
என் நினைவிலும் -
ஒளிந்து விளையாட என்பதை தான்
அப்படி சூசகமாய் சொன்னாய
பெண்ணே..!!

Wednesday, August 5, 2015

நிழல்

நிழல் போல வந்தாய்..
நிஜம் என்று நம்ப செய்தாய்..
உயிரில் பங்கு போட்டாய்..
என் உறவு நீ தான் என்றாய்..
இன்று..??
இருளில் விலகும் நிழல் போல
நீயும் மறைந்துவிட்டாய்
பெண்ணே..!!!

வாழலாம்

வாழலாம்
என்று சொல்லிவிட்டு
இன்று - நீ
வாழ்கிறாய் ஒருவருடன்
நான் வாழ்கிறேன்
உன் நினைவுகளில்

அறிகுறிகள்

நாணம் கொண்டாய்..
விரல் கடித்தாய்..
வெட்கி தலை குனிந்தாய்..
காலில் கோலமிட்டாய்..!
இத்தனை அறிகுறிகள் - என்னை
காதல் செய்கிறாய் என்று
ஆனால்
விட்டு செல்லும் போது மட்டும்
எதுவும் சொல்லவில்லையே..!!

Tuesday, August 4, 2015

ஒற்றுமை

பெண் - பொய்
இரண்டுக்கும் ஓர் எழுத்து வித்தியாசம்
ஆனால் - அதன் பொருளில்
நூறு சதவிதம் ஒற்றுமை