Tuesday, September 25, 2012

பெண்ணின் ஆயுதம்

புலவர்கள் ஏன் இந்த பெண்களின் விழிக்கு இத்தனை முக்கியத்துவம் தந்தார்கள் என்று இப்பொது புரிகிறது ... 
இரு விழி --ஒரு சொட்டு கண்ணீர் ..
ஆயிரம் மொழி பேசுகிறது 
காதல் சொல்கிறது
ஊடல் செய்கிறது
கோபம் பொழிகிறது
கவிதை புனைகிறது
அடிமை படுத்துகிறது
பலவீனம் செய்கிறது
இன்பம் தருகிறது
வெட்கம் அடைகிறது
வீரம் கொள்கிறது
அப்பப்பா...
இந்த பெண்களின் இரு வேல்களுக்கு 
எந்த மன்னாதி மன்னனும் அடிமை தான் கடைசிவரை ...
நான் மட்டும் என்ன விதிவிலக்கா !!!

Monday, September 24, 2012

கவிதை பஞ்சம்

அன்று 
பதிவு செய்யாமல் கிழித்த கவிதைகள் அதிகம்  
இன்று 
பதிவு செய்ய நினைக்கிறன்...
கவிதைகள் இல்லை என்னிடம் 
பெண்ணே நீ இல்லாததால்

புத்தகங்கள்

காதலி விட்டுச் சென்ற தனிமையை 
சோழனும் பாண்டியனும் ஆக்கிரமித்து கொண்டார்கள் 
எத்தனை இன்பம் இந்த புத்தகத்தில்
இவர்களுடன் நான் செல்லாத தூர தேசங்களே இல்லை-
நான் செய்யாத போர்கள் இல்லை-
ஆயிரம் பெண்களை காதல் செய்திருப்பேன் இதுவரை-
வீரம்,காதல்,கவிதை,கற்பனை,கோபம்,அறிவு 
என்று எத்தனை எத்தனை சுகங்கள் இந்த பக்கங்களில்!!
என்னவளே.....என் நன்றிகள் உனக்கு 
விட்டு சென்றதுக்கு என்னை

தோழி

தன்னை பற்றி ஒரு கவிதை எழுதுமாறு கேட்டால் அவள் - 
என்ன எழுதுவேன் நான்...தெரியவில்லையே !!!
சரி...உனக்கான என் ஒரு வரி கவிதை 
                  " நன்றி தோழி "

கற்பனை

காதலி மட்டும் தானே என்னை விட்டு சென்றால்...
என் கற்பனை கூடவா என்னை விட்டு  சென்று விட்டது ???
ஒரு கவிதை எழுத இத்தனை நிமிடம் 
யோசிக்கிறது என் மனம் !!